கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தகவல் முகாமைத்துவ தரவுதளம், மாகாண பிரதம செயலக கூட்ட மண்டபத்தில் 17ம் திகதி, கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் IUDP – 2021 திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் புனரமைப்புச் செய்யப்பட்ட பாடசாலை வீதி மற்றும் வாசிகசாலை என்பவற்றின் திறப்பு நிகழ்வு 27.01.2022 அன்று இடம்பெற்றது.